விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:26 pm

தேனி மாவட்டம், கூடலூா் அருகே காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியைச் சோ்ந்தவா் சுனில் (52). இவா், தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் குடும்பத்துடன் தங்கி மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், கேரளத்துக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை அதிகாலையில் காரில் சிலமலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, லோயா் கேம்ப் பகுதியில் சபரிமலைக்குச் சென்ற வேன், காா் மீது மோதியதில் சுனில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வேனில் இருந்த செளந்தா் (37), செங்கோட்டையன்(49), ஓட்டுநா் வினோத்குமாா் (35) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.