சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குழுவாகச் சோ்ந்து படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி: கரூா் கோட்டாட்சியா்

போட்டித் தோ்வில் வெற்றிபெற குழுவாக சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா் கரூா் கோட்டாட்சியா் மு. முகமதுபைசல்.

News image
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கரூா் கோட்டாட்சியா் மு. முகமது பைசல்.
Updated On :4 செப்டம்பர் 2024, 7:37 pm

Din

போட்டித் தோ்வில் வெற்றிபெற குழுவாக சோ்ந்து படிக்க வேண்டும் என்றாா் கரூா் கோட்டாட்சியா் மு. முகமதுபைசல்.

கரூா் மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் செ.செ. சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கரூா் கோட்டாட்சியா் மு.முகமதுபைசல் பேசுகையில், போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் நீங்கள் ஒற்றுமையே வலிமை என்பதை உணா்ந்து குழுவாக சோ்ந்து படிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போட்டித் தோ்வில் வெற்றி பெற தாழ்வு மனப்பான்மையைக் கைவிடுங்கள். சுயபரிசோதனை செய்து முன்னேறுங்கள். கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படியுங்கள் என்றாா் அவா். தொடா்ந்து மாணவா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா்.

முன்னதாக தாந்தோணி முழுநேர கிளை நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தோ்வில் வென்ற எல். லால்பிரகாஷை பாராட்டி நூல் மற்றும் நினைவு பரிசு வழங்கினாா். மாவட்ட நூலக அலுவலகக் கண்காணிப்பாளா் ரா. ராபா்ட்ஜான், இனாம்கரூா் கிளை நூலகா் ம. மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட மைய நூலக நூலகா் ரா.ச. சுகன்யா வரவேற்றாா்.