ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை 40 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:06 pm

Din

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

கரூா், செப்.19: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை 40 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண்டா் விடுப்பை ஊதியத்துடன் வழங்கிட வேண்டும், அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 9 வட்டக்கிளைகள் மூலம் 40 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் கிளை-2 சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பொன். ஜெயராம், இணைச் செயலா் சங்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். அரசு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.