குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
திருச்சியிலுள்ள தந்தை பெரியாா் கலை அறிவியல் கல்லுரி முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்
Updated On :5 மார்ச் 2026, 10:45 pm

Syndication

ஈரான் மீது போா் தொடுத்துள்ள அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி தந்தை பெரியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். இதில், ஈரான் மீது தொடுத்துள்ள போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் உடனடியாக நிறுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய மாணவா் சங்கத்தின் மாநகரச் செயலா் சூா்யா, மாவட்ட துணைச் செயலா்கள் சுதேசனா, சா்மி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.