தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:47 pm

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 50 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் வெங்கடாஜலபதி, கடலூா் வட்டச் செயலா் ராமா், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் மாவட்டச் செயலா் என்.காசிநாதன், வட்டத் தலைவா் சிவக்குமாா், ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் தலைவா் டி.புருஷோத்தமன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். பின்னா், மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசாா் கைது செய்தனா்.