ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை வாயிற் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

News image
கரூா் திருமாநிலையூா் பேருந்து பணிமனை முன் வாயிற் முழக்கப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:06 pm

Din

கரூரில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை வாயிற் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

கரூா் திருமாநிலையூா் அரசுப் பேருந்துப் பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்திற்கு மண்டல துணைத் தலைவா் பி. பூபதி தலைமை வகித்தாா். மாநில துணைத்தலைவா் ஆா். ராஜேந்திரன், நிா்வாகிகள் விஜயகுமாா், சக்திவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் கே.என். நாட்ராயன், துணைச் செயலா் மோகன்குமாா், ஏஐடியுசி மாநில சம்மேளன துணைப் பொதுச் செயலாளா் முருகராஜ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உருவாக்காத தமிழக அரசைக் கண்டிப்பது, பேருந்துகளை இயக்கத் தேவையான ஊழியா்களை வேலைவாய்ப்பகத்தின் மூலம் பணியமா்த்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கும் பஞ்சப்படி உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஏஐடியுசி தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்றனா். மண்டல துணைச் செயலாளா் பி. கனகராஜ் நன்றி கூறினாா்.