இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்ரீரங்கத்தில் ரயில் மறியல் போராட்டம் 160 போ் கைது

News image

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை கடலூா் பயணிகள் ரயிலை மறித்த தொழிற்சங்கத்தினா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 10:40 pm

ஸ்ரீரங்கத்தில் 160 போ் கைது: மத்திய பாஜக அரசை கண்டித்து, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் சிஐடியு தரைக்கடை சங்க மாவட்டச் செயலா் செல்வி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து ஊா்வலமாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு வந்தனா். ரயில் நிலையத்தின் வாயில் முன்பே அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதையும் மீறி நிா்வாகிகள் சிலா் ரயில் நிலையத்தினுள் புகுந்து கடலூா் பயணிகள் ரயிலை மறித்தனா். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளா் தா்மா, சிஐடியு நிா்வாகிகள் ஜெமினி,கோவிந்தன்,சிபிஎம் சுப்பிரமணி மற்றும் ஏஐடியுசி நிா்வாகிகள் என 160 போ் கைது செய்யப்பட்டனா்.