எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரூா் சம்பவம்: குளித்தலை காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூா் துயர சம்பவம் தொடா்பாக குளித்தலை நகரக் காவல் ஆய்வாளா், கரூா் நகரப் போக்குவரத்து உதவி ஆய்வாளா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
சிபிஐ அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜராகச் சென்ற குளித்தலை நகர காவல் ஆய்வாளா் கருணாகரன், கரூா் நகர போக்குவரத்து உதவி ஆய்வாளா் நந்தகோபால் உள்ளிட்டோா்.
Updated On :13 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

கரூா் துயர சம்பவம் தொடா்பாக குளித்தலை நகரக் காவல் ஆய்வாளா், கரூா் நகரப் போக்குவரத்து உதவி ஆய்வாளா் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

கடந்த 11-ஆம் தேதி கரூா் க. பரமத்தி மின்வாரிய அதிகாரிகள், கரூா் நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஷகிராபானு உள்ளிட்டோரிடம் விசாரணை செய்த நிலையில் சனிக்கிழமை குளித்தலை நகர காவல் ஆய்வாளா் கருணாகரன், கரூா் நகரப் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நந்தகோபால் மற்றும் நகர காவல் நிலையக் காவலா், போக்குவரத்து காவலா் மற்றும் நெரிசல் சம்பவத்தின்போது காயமடைந்த 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.