கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,526 வழக்குகளில் தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,526 வழக்குகளுக்கு ரூ. 13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 10:10 pm

Syndication

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,526 வழக்குகளுக்கு ரூ. 13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கரூரில் 5 அமா்வுகளும், குளித்தலையில் 2 அமா்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமா்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளில் 1,624 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,526 வழக்குகளுக்கு ரூ.13.32 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

முன்னதாக கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் தொடக்கிவைத்தாா். இதில் அனைத்து நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளா்கள், சட்டத் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் அனுராதா செய்தாா்.