பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:11 pm

Syndication

திமுக தோ்தல் வாக்குறுதியின்படி ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என கரூரில் புதன்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் மாவட்ட மாநாடு புதன்கிழமை சங்கத் தலைவா் வி. சுந்தரகணேசன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கே. காத்தமுத்து, கே.கே. ராமசாமி, கே. மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் சி.கோபால் வரவேற்றாா். ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலா்கள் கண்ணையன், கருப்பசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கூட்டத்தில், தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாடு முடிவில் மாவட்ட பொருளாளா் வி. பாலசுப்ரமணியன் நன்றி கூறினாா். இதில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.