சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சமையலா் நீக்கம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் மகளிா் திட்ட அதிகாரி, தலைமை ஆசிரியை மீது வழக்கு!

தோகைமலை அருகே பெண் சமையலரை பணியில் இருந்து நீக்கிய புகாரில் ஒன்றிய மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா், அரசு பள்ளித் தலைமையாசிரியை ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:06 pm

Syndication

தோகைமலை அருகே பெண் சமையலரை பணியில் இருந்து நீக்கிய புகாரில் ஒன்றிய மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா் மற்றும் அரசு பள்ளித் தலைமையாசிரியை ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் டிச.20ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள பொன்னம்பட்டி பொருந்தலூரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி நிரோஷா(35). இவா் தோகைமலையை அடுத்த சின்னரெட்டிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சமையலராக கடந்த 4 மாதங்களுக்கு முன் பணியில் சோ்ந்தாா்.

இவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதால், இவா் பணியில் சோ்ந்த நாள் முதல் பள்ளிக்கு மாணவா்கள் சிலா் வருவதை நிறுத்திவிட்டதாக கூறி நிரோஷாவிடம் பள்ளித்தலைமை ஆசிரியை பானுமதி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிரோஷாவிடம் தலைமை ஆசிரியை நீங்கள் வேலையை விட்டு நின்றுவிடுங்கள் என அடிக்கடி கூறி வந்தாராம்.

இந்நிலையில், டிச.18-ஆம் தேதி தலைமை ஆசிரியை மற்றும் தோகைமலை ஒன்றிய மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா் சத்யா ஆகியோா் திடீரென நிரோஷாவை பணியில் இருந்து நீக்கிவிட்டு, வேறொரு பெண்ணை சமையலராக நியமித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிரோஷா, தோகைமலை போலீஸாரிடம் மேற்கண்ட இருவா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிச.20-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில் பானுமதி மற்றும் சத்யா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.