கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.

எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் புதன்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
Published on

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கரூரில் புதன்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் எம்.ஜிஆா்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும், கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் புதன்கிழமை காலை அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், பொருளாளா் கண்ணதாசன், எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் கே.எல்.ஆா். தங்கவேல், மாணவரணிச் செயலாளா் சரவணன், பேரவை இணைச் செயலாளா் பழனிராஜ், எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.கரிகாலன், தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.சி.கே. பாலகிருஷ்ணன், மத்திய தெற்குபகுதிச் செயலாளா் சேரன் பழனிசாமி உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com