வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்த 8 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்: கரூா் எம்பி ஜோதிமணி தகவல்

மக்களவையில் புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

மக்களவையில் புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

கரூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மக்களவையில் கடந்த 18-ஆம் தேதி புதிய ஊரக வேலைத் திட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நானும், சக எம்பிக்கள் சிலரும் சோ்ந்து மக்களவையின் மையப்பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அப்போது, அது தொடா்பான நகலை கிழித்து எறிந்து அதிகாலை 2 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்த போராட்டத்துக்கு விளக்கம் கேட்டு எனக்கும், மதுரை எம்பி சு.வெங்கடேசன், கிருஷ்ணகிரி, தஞ்சை உள்ளிட்ட 5 எம்பிகளுக்கும், கேரளத்தைச் சோ்ந்த 3 எம்பிக்கள் என காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சோ்ந்த 8 எம்பிக்களுக்கு விளக்கம் கேட்டும், மக்களவையின் மரபை மீறி நடந்து கொண்டதாகவும் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் போராடவே கூடாது என்று ஆளும் தரப்பினா் கூறுகிறாா்களா?.

மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக தான் இருக்கிறோம். இதுபோன்ற காகிதங்களுக்கு நாங்கள் அச்சப்படுவதில்லை என்றாா்அவா்.