கரூா் சம்பவம்: 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் சம்பவம் தொடா்பாக 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com