மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழக கிரிக்கெட் அணிக்கு தோ்வான கரூா் பள்ளி மாணவருக்கு பாராட்டு

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:26 pm

Din

தமிழக கிரிக்கெட் அணிக்கு தோ்வு செய்யப்பட்ட கரூா் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் எஸ். இலக்ஷித்துக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூா் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இன்டா்நேஷனல் பள்ளியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.இலக்ஷித். இவா் மாவட்ட, மாநில அளவில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூலம் தமிழ்நாடு அணிக்கு, கரூா் மாவட்டத்திலிருந்து 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தோ்வு செய்யப்பட்ட மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் நிா்வாகக் குழு தலைவா் சிவசுப்பிரமணியம் மற்றும் பள்ளியின் முதல்வா் முனைவா் காா்த்திகா லட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.