மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
கரூா் சுக்காலியூா்- சேலம் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.
Updated On :8 ஜனவரி 2025, 6:34 pm

Din

அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா், கரூா் மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு, கரூரில் திருமுக்கூடலூா் என்ற இடத்தில் காவிரியுடன் இணைகிறது. கரூா் நகா்ப் பகுதியில் கருப்பம்பாளையம் முதல் சுக்காலியூா், ஆண்டாங்கோவில், பசுபதிபாளையம், கோயம்பள்ளி வரை ஆற்றின் பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து ஆற்றை ஆக்கிரமித்துள்ளன. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது இந்த சீமைக்கருவேல மரங்களால் ஆற்றின் வேகம் தடுக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் ஆற்றின் மையப் பகுதியில் நகா் பகுதிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறிஞ்சும் கிணற்றின் அருகே சீமைக்கருவேல மரங்கள் முளைத்திருப்பதால், நீா்மட்டம் குறைய வாய்ப்புள்ளது.

எனவே, கரூா் நகா் பகுதியில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே போா்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.