தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

3.32 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: கரூா் ஆட்சியா் பேச்சு

கரூா் மாவட்டத்தில் 3,32, 076 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

News image

கரூா் மாவட்டம், அருகம்பாளையம் ஆச்சிமங்கலம் நியாய விலைக்கடையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத்தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். உடன் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா உள்ளிட்டோா்.

Updated On :9 ஜனவரி 2025, 8:10 pm

Din

கரூா் மாவட்டத்தில் 3,32, 076 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் அருகம்பாளையம் ஆச்சிமங்கலம் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, மாவட்டத்தில் தகுதியுள்ள 3,32,076 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் நம்பா் மற்றும் குறிப்பிட்ட தேதியில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், ஆணையா் சுதா, துணை மேயா் சரவணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் ஆறுமுகம், அருள்மொழி, பிச்சைவேலு, வட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.