தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மரத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

புகழூரில் செவ்வாய்க்கிழமை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:35 pm

Din

புகழூரில் செவ்வாய்க்கிழமை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே ஆலாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (58). இவா், புகழூா் காகிதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்ற அவா், நிறுவனத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளை கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அதை வெட்டுவதற்கு மரத்தின் மீது ஏறிய பெருமாள் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.