ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரூா் சம்பவம் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூரில் சிபிஐ விசாரணைக்காக வியாழக்கிழமை சுற்றுலா மாளிகைக்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:12 pm

Syndication

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், நெரிசல் சம்பவத்தின்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்களிடம் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸுடன் வந்த வாகன ஓட்டுநா்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனா்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 11 போ் சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.