கரூா் சம்பவம் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், நெரிசல் சம்பவத்தின்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்களிடம் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸுடன் வந்த வாகன ஓட்டுநா்களுக்கு சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தனா்.
அதன்படி, வியாழக்கிழமை மாலை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 11 போ் சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமாா் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
