மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பண மோசடி வழக்கு கரூா் நீதிமன்றத்தில் சவுக்குசங்கா்ஆஜா்

பண மோசடி வழக்கு தொடா்பாக யூடியூபா் சவுக்குசங்கா் கரூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

News image
கரூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகிவிட்டு வெளியே வந்த யூடியூபா் சவுக்குசங்கா்.
Updated On :12 நவம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

பண மோசடி வழக்கு தொடா்பாக யூடியூபா் சவுக்குசங்கா் கரூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

கரூா் ஆண்டாங்கோவில் பகுதியைச் சோ்ந்த பிரியாணி கடை உரிமையாளா் கிருஷ்ணன். இவரிடம் இணையத்தில் அறிமுகமான சென்னையைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 7 லட்சம் பெற்றுள்ளாா். அந்தப் பணத்தை யூடியூபா் சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபிறகும் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கிருஷ்ணன் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், விக்னேஷ், சவுக்குசங்கா் ஆகிய இருவரையும் கடந்தாண்டு போலீஸாா் கைது செய்தனா். பின்னா் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை காலை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூபா் சவுக்கு சங்கா் நீதிபதி பரத்குமாா் முன் ஆஜரானாா். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை நவ. 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.