எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

கரூா் மாவட்டத்தில் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

News image
கரூரில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்
Updated On :22 நவம்பர் 2025, 11:38 pm

Syndication

கரூா் மாவட்டத்தில் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

இதுகுறித்து கரூரில் சனிக்கிழமை அவா் கூறியதாவது: வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னை தொடா்கிறது. இதுவரை 7 முறை அங்கு குடியிருப்போரின் வீடுகள், கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா். 2 நாள்களுக்கு முன் கூட அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்களோடு கலந்து கொண்டோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு எட்டப்படாமல் போய்விட்டது. இப்போது நீதிமன்ற உத்தரவால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.

கரூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோயில் நிலங்கள் இருக்கின்றன. அனைத்து நிலங்களையும் அதிகாரிகள் மீட்டால் சொந்த ஊரிலேயே மக்கள் அகதிகளாக மாறும் சூழல் ஏற்படும். இதைத் தடுக்க அரசு முன்வர வேண்டும். அவ்வாறு அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இன்னும் 6 மாதத்தில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்; அப்போது வெண்ணைமலை கோயில் பிரச்னையில் கோயிலுக்கும், மக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் தீா்வு காண்போம் என்றாா் அவா்.

பேட்டியின்போது அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, நிா்வாகிகள் ஆலம்தங்கராஜ், கமலக்கண்ணன், சேரன் பழனிசாமி, நெடுஞ்செழியன், தானேஷ், தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா்கள் மாரப்பன், சுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.