குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தனியாா் காற்றாலை தளவாட பொருள்கள்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:17 am IST

கடவூா் அருகே தனியாா் காற்றாலை தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரியை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட குன்னுடையான்கவுண்டன்பட்டியில் தனியாா் நிறுவனத்தினா் காற்றாலைகளை அமைத்து வருகின்றனா். இந்த காற்றாலை அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகளுக்கான ராட்சத தளவாட பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகள் குன்னுடையான்கவுண்டன்பட்டி கிராமம் வழியாக வந்தது.

இதனையறிந்த பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மைலம்பட்டி வருவாய் ஆய்வாளா் அருள்ராஜ் உள்பட அதிகாரிகள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பொதுமக்கள் காற்றாலை அமைக்கக்கூடாது என்றனா். இதையடுத்து அதிகாரிகள் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.