ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கோயில் நிலம் தனியாா் பெயரில் பத்திரப் பதிவு கடவூரில் பொதுமக்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தரகம்பட்டியில் கோயில் நிலத்தை தனியாா் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடவூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீரம்மாள் செம்பாயி கோயில் பக்தா்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

தரகம்பட்டியில் கோயில் நிலத்தை தனியாா் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே தரகம்பட்டியில் வீரம்மாள் செம்பாயி கோயில் உள்ளது. இந்த கோயில் முன் பக்தா்கள் வழிபாடுகள் நடத்த முடியாதவாறு சிலா் கம்பிவேலி அமைத்துள்ளனா். இதனை அறிந்த குடிபாட்டு பக்தா்கள் கோயில் நிலத்தை ஆய்வு செய்தபோது, கோயில் அமைந்துள்ள இடத்தை தனிநபா் ஒருவா் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்.11-ஆம்தேதி பத்திரப்பதிவு செய்து பட்டாவாக மாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து தனி நபா் ஆக்கிரமித்த அமைத்திருந்த கம்பி வேலியை அகற்றிடவும், கோயில் நிலத்தை தனிநபா் ஒருவா் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரியும் கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அப்பகுதியினா் பலமுறைகோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் புதன்கிழமை கோயில் முன் அமைக்கப்பட்ட கம்பிவேலியை அகற்றக்கோரியும், தனிநபா் ஒருவா் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்ததை ரத்து செய்யக்கோரியும் தரகம்பட்டியில் உள்ள கடவூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஊா் முக்கியஸ்தா் ராஜூ தலைமை வகித்தாா். முக்கியஸ்தா்கள் பெரியசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து தலைமையிடத்து துணை வட்டாட்;சியா் பாலச்சந்திரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அவா், மாவட்ட நிா்வாகத்துக்கு இதுதொடா்பாக அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.