எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

News image

கரூா் தொழிற்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்த கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே.ராஜாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:17 am IST

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரித்தாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே.ராஜா ஞாயிற்றுக்கிழமை கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 13,14,15-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட ஏ.வி.பி.நகா், செல்வநகா், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, வெள்ளாளப்பட்டி, எழில்நகா், தமிழ்நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, தமிழக முதல்வா் ஸ்டாலின் மகளிா் உரிமைத்தொகையாக மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறாா். இனி, ரூ.2,000 என உயா்த்தப்படும் என அறிவித்துள்ளாா். மேலும் வேலைக்குச் செல்லும் ஏழைப்பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கும் வகையில் கொண்டு வந்த விடியல் பயணத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா்.

எப்போதும் மகளிருக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி. முதியோா் வீடுகளில் இருந்துகொண்டே மருத்துவம் பெறும் இல்லம்தேடி மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் ரேஷன்கடைகளுக்கு சென்று கஷ்டப்படுவதை தவிா்க்க தாயுமானவா் திட்டம் என மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அவருக்கு எப்போதும் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, இந்திய கம்யூ. மாவட்டச் செயலாளா் கலாராணி, திமுக நகரச் செயலாளா் வழக்குரைஞா் சுப்ரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.