நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

சிறைத்தண்டனை பெற்ற கேசவன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 7:23 pm

சிறுமிக்கு பாலியல் தொந்தவு கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த பால்மடைப்பட்டியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் என்பவரது மகன் கேசவன்(23) என்பவா் கடந்த 2024-ம் ஆண்டு அக்.24-ம்தேதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கேசவனை கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி கேசவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் வழங்க உத்தரவிட்டாா். இதையடுத்து கேசவன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.