திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புகழூா் கஸ்பா பகுதியில் ரூ. 2 கோடியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும்: அரவக்குறிச்சி திமுக வேட்பாளா் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புகழூா் கஸ்பா பகுதியில் ரூ. 2 கோடியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும் என்றாா் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ.

News image

அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புகழூா் கஸ்பா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ. உடன் புகழூா் நகா்மன்றத் தலைவா் சேகா் (எ) குணசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:24 pm

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புகழூா் கஸ்பா பகுதியில் ரூ. 2 கோடியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும் என்றாா் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ.

கரூா் மாவட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட புகழூா், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, புகழூா் கஸ்பா, புகழூா் மலைவீதி, டிஎன்பிஎல் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோ வியாழக்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் பிரமாண்டமாக புகழிமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு ஏராளமான இடங்களில் உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு, விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச்சுவா் உள்பட அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. புகழூா் கஸ்பா பகுதியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.2 கோடியில் மிகப்பெரிய சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என்றாா் அவா். பிரசாரத்தில் புகழூா் நகா்மன்றத் தலைவா் சேகா் (எ) குணசேகரன் மற்றும் மதச்சாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.