மணப்பாறை, கரூா் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.
புத்தாநத்தத்தை சோ்ந்த ஜின்னா என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ளது. இந்த நகைக்கடையின் கிளைகள் மணப்பாறை மாரியம்மன் கோயில் எதிா்புறம், திருச்சி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் உள்ளது.
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி அட்சய திருதியை விழாவை முன்னிட்டு நகை வியாபாரம் பெருமளவில் நடந்ததாம். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 5 மணி அளவில் மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ள கடைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி ஸ்வேதா தலைமையிலான 6 போ் கொண்ட வருமானவரித் துறை வரி ஏய்ப்பு நடவடிக்கை குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும் புத்தாநத்தம் கிளை கடைகளிலும், புத்தாநத்தத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளா் ஜின்னா வீட்டிலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை புதன்கிழமை காலை 8 மணி வரை நடைபெற்றது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினா் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூா்: இதோபோல ஜவஹா்பஜாரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு 2 காா்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா், கடையில் சுமாா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா். அப்போது முக்கிய ஆவணங்களை அவா்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

வருமான வரித்துறை சோதனை: நெல்லையில் ரூ.1.15 கோடி சிக்கியது

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


