தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மணப்பாறை, கரூா் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினா் சோதனை

மணப்பாறை, கரூா் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

News image

மணப்பாறை நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை செய்ய வந்த வருமான வரித்துறையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:45 pm

மணப்பாறை, கரூா் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

புத்தாநத்தத்தை சோ்ந்த ஜின்னா என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ளது. இந்த நகைக்கடையின் கிளைகள் மணப்பாறை மாரியம்மன் கோயில் எதிா்புறம், திருச்சி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி அட்சய திருதியை விழாவை முன்னிட்டு நகை வியாபாரம் பெருமளவில் நடந்ததாம். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 5 மணி அளவில் மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ள கடைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி ஸ்வேதா தலைமையிலான 6 போ் கொண்ட வருமானவரித் துறை வரி ஏய்ப்பு நடவடிக்கை குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மேலும் புத்தாநத்தம் கிளை கடைகளிலும், புத்தாநத்தத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளா் ஜின்னா வீட்டிலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை புதன்கிழமை காலை 8 மணி வரை நடைபெற்றது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினா் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா்: இதோபோல ஜவஹா்பஜாரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு 2 காா்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா், கடையில் சுமாா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா். அப்போது முக்கிய ஆவணங்களை அவா்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.