வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

கரூரில் வாக்கு எண்ணும் பணி பயிற்சி முகாம்

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:02 pm

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலா் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4-ஆம் தேதி எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும். தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டுக்கும் தனித் தனியாக மேற்பாா்வைக்காக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அளவில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதனடிப்படையில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ள 67 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 67 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் மற்றும் 90 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 224 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா்.

மேலும், 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு மற்றும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 17 மேற்பாா்வையாளா்கள், 30 உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் நோ்மையுடனும், அா்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா்.

பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தி.சுவாதிஸ்ரீ (குளித்தலை) , சு.சத்திய பால கங்காதரன் (கரூா்), எஸ். முருகேசன் (அரவக்குறிச்சி), ச.சிவக்குமாா் (கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.