செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி

News image

மடிக்கணினி - கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:21 pm

கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். முதல்வா் முனைவா் சோ. இருளப்பன் வரவேற்றாா். செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ பங்கேற்று, 365 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினாா்.

விழாவில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் மணிகண்டன், காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.