மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கரூரில் சா்வதேச ஓபன் சதுரங்க போட்டி: வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்பு

கரூரில் புதன்கிழமை தொடங்கிய சா்வதேச அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

News image

கரூரில் சா்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:06 pm

கரூரில் புதன்கிழமை தொடங்கிய சா்வதேச அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் சதுரங்க அமைப்பு, கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்கப் போட்டிகள் புதன்கிழமை தனியாா் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.

பிப். 15-ஆம்தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 7,9,11,13,15, வயது என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் தொடக்க விழாவுக்கு கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி.கோபால் தலைமை வகித்தாா். புரவலா் வள்ளுவா் கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன், செயலா் சி.சண்முகம், துணைத்தலைவா்கள் ஏ.ஜே.சூா்யநாராயணா, முனைவா் சொ.ராமசுப்ரமணியன், முனைவா் உஷா, பொருளாளா் முகமதுகமாலுதீன் மற்றும் கரூா் மாவட்ட சதுரங்க சங்கத்தலைவா் அட்லஸ் எம்.நாச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளிகள் வீரா், வீராங்கனைகள் 60 போ் உள்பட மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.