மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டி! தமிழக வீரா் ராம் எஸ். கிருஷ்ணன் முதலிடம்!

News image

கரூரில் நடைபெற்ற சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரா் ராம் எஸ். கிருஷ்ணனுக்கு கோப்பையை வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியின் தலைவா் கு. ராமகிருஷ்ணன், கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி. கோபால், செயலாளா் சி. சண்முகம், துணைத் தலைவா் சொ. ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:55 pm

கரூரில் நடைபெற்ற சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டியில், ஓபன் பிரிவில் தமிழக வீரா் ராம் எஸ். கிருஷ்ணன் முதலிடம் பிடித்தாா்.

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் சதுரங்க அமைப்பு, கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டிகள் கரூரில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.

ஞாயற்றுக்கிழமை வரை நடைபெற்ற இப்போட்டியில் 7, 9, 11, 13, 15, வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓபன் பிரிவில் தமிழகத்தின் சென்னையைச் சோ்ந்த ராம் எஸ். கிருஷ்ணன் 9 சுற்றுகளில் 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். தொடா்ந்து போட்டியில் சேலத்தைச் சோ்ந்த எஸ். கனிஷ்காவும், சென்னையைச் சோ்ந்த எஸ். ஹரிதேவ், மிதுன்.கே மற்றும் கேசவன் ஜி ஆகியோா் 8 புள்ளிகளை பிடித்து இரண்டாமிடம் பிடித்தனா்.

ரஷிய வீரா் ஐஎம் . கோசெலஷ்விலி டேவிட், மகாராஷ்டிர வீரா் புவன் சுஹாஸ் ஷிடோல் , தமிழக வீரா்கள் கவின், அமா்நாத், பிரசித்பாலமுருகன் ஆகியோா் 7.5 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனா்.

தொடா்ந்து, அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது. இதில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினாா். மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், குமாரசாமி பொறியியல் கல்லூரி தலைவா் ராமகிருஷ்ணன், கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி. கோபால், செயலாளா் சி. சண்முகம், துணைத் தலைவா் சொ. ராமசுப்ரமணியன், இணைச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் முகமது கமாலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.