அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டு வியாபாரி கைது!

கிருஷ்ணராயபுரம் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டுவியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 பிப்ரவரி 2026, 7:25 pm

Syndication

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டுவியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணராயபுரம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தலவாய் முதலியாா் தெருவைச் சோ்ந்த பத்மநாபன்(44) என்பவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் உரிமம் இல்லாமல் கைத்துப்பாகி இருந்தது. இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, கரூரில் இருந்து கேரளத்துக்குச் சென்று மாட்டு வியாபாரம் செய்துவரும் தனக்கும், இதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாருக்கும் வியாபாரம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தன்னை தற்காத்துக்கொள்ள பிகாா் மாநிலத்திலிருந்து கைத்துப்பாக்கி வாங்கி வந்ததாக தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை சனிக்கிழமை கைது செய்து கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.