மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கு சாா்ந்த ஓவியம், ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

கரூரில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் கு சாா்ந்த ஓவியப்போட்டி மற்றும் கு ஒப்பித்தல் போட்டியில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:26 pm

Syndication

கரூா்: கரூரில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் கு சாா்ந்த ஓவியப்போட்டி மற்றும் கு ஒப்பித்தல் போட்டியில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க விரும்பும் கரூா் மாவட்ட பொதுமக்கள் தங்கள் ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை நகலுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும்.

கு ஒப்பித்தல் போட்டியில் தரவரிசை அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதல் 5 பேருக்கு தலா ரூ.5,000 வீதமும், அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 3,000 வீதமும் அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 2,000 வீதமும் ஆக மொத்தம் ரூ.50,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஓவியப்போட்டியில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஓவியப்போட்டியில் பங்கேற்போா் வண்ணப்பென்சில்கள் மற்றும் தேவையான பொருள்களை எடுத்து வர வேண்டும். ஓவியம் வரைவதற்கு தேவையான தாள் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா் அவா்.