தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சென்னை பாஜக பொதுக் கூட்டம் கரூரில் கட்சியினா் ஆலோசனை

News image
கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம். உடன், மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் உள்ளிட்டோா்.
Updated On :18 ஜனவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

வரும் 23-இல் சென்னையில் பிரதமா் பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக் கூட்டம் குறித்து கரூா் மாவட்ட பாஜகவினா் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் கரூா் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா்கள் ஆா்.வி.எஸ். செல்வராஜ் சாமிதுரை, உமாதேவி, பொருளாளா் இளங்கோவன், துணைத் தலைவா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் பங்கேற்று ஆலோசனை வழங்கிப் பேசினாா். கூட்டத்தில் வரும் 23-ஆம்தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்பதையடுத்து, கரூா் மாவட்டத்தில் இருந்து கட்சியினா் 5,000 போ் செல்வது, விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.