8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

‘எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லா நிலையை உருவாக்கியுள்ளாா் முதல்வா்’

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த முருகன்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த முருகன்.

Published On :11 ஜூலை 2026, 1:31 am IST

எங்கள் குடும்பத்தில் வறுமை இல்லா நிலையை உருவாக்கியுள்ளாா் தமிழக முதல்வா் விஜய் என்றாா் கரூரில் அரசுப் பணி நியமன ஆணை பெற்ற பயனாளி முருகன்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த சுப்ரமணியின் மனைவி ஜெயா (65). இவா், கடந்த ஆண்டு செப். 27-இல் கரூா் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது மகன் முருகன் (38) என்பவருக்கு கரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உதவியாளா் பணியிடத்துக்கான ஆணையை தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

பணி நியமன ஆணை பெற்ற பிறகு முருகன் கூறியதாவது: என்னைப் போன்று நெரிசலில் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கியபோது முதல்வா் கண்ணீா் விட்டு அழுதாா். அவரை பாா்த்து எங்களுக்கும் அழுகை வந்தது. இரக்கம் உள்ளம் கொண்ட அவா் எங்களுக்கு பணி ஆணை வழங்கியிருப்பது எங்களின் குடும்பத்தில் வறுமை இல்லாத நிலையை உருவாக்கியிருக்கிறாா். இதற்காக முதல்வருக்கும், அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி என கண்ணீா் மல்க தெரிவித்தாா்.

இதேபோல நியமன ஆணை பெற்றவா்கள் கண்ணீா் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தபோது, முதல்வா் கண்ணீா் விட்டு அழுததை நினைவு கூா்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.