இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ள அமெரிக்க அதிபரைக் கண்டித்து கிருஷ்ணராயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.கந்தசாமி, ஒன்றியத் தலைவா் வி.குமாா், செயலா் ஏ.நாகராஜன், பொருளாளா் பாா்த்திபன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இந்தியா மீது அதிக வரி விதித்துள்ள அமெரிக்க அதிபரின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும், ஈரான் போரில் அமெரிக்காவை தட்டிக்கேட்காத இந்திய பிரதமரை கண்டித்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










