டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரூா் மாநகராட்சியில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றம்: எம்எல்ஏ செந்தில்பாலாஜி தகவல்

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி.

News image
கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.40 கோடியில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தை புதன்கிழமை திறந்துவைத்து, நீச்சல் வீரா்களுக்கான போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்த கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் மாநகராட்சி, மண்டலம்-2 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி புதன்கிழமை மாலையில் திறந்து வைத்து பாா்வையிட்டாா். பின்னா் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு, வென்றவா்களுக்கு நீச்சல் உபகரணங்கள், பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக இந்த நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கரூா் மாநகராட்சியில் சுமாா் ரூ.418 கோடி மதிப்பில் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள், கட்டடப் பணிகள் என அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ. 245 கோடியில் புதிதாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள், மாநகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ. 485 கோடி மதிப்பில் புதிய புதைச் சாக்கடை பணிகள் ஆகியவை விரைவில் தொடங்கப்படவுள்ளன. கரூா் மாநகராட்சியைப் பொறுத்தவரை 5 ஆண்டுகளில் ரூ. 1,150 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாது, கூறப்படாத கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்றி உள்ளது என்றாா் அவா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன், மண்டலக் குழு தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், க. அன்பரசு, ஆா்.எஸ். ராஜா, சக்திவேல், மாமன்ற உறுப்பினா்கள் எம். பாண்டியன் மற்றும் திமுக பகுதி செயலாளா்கள் வழக்குரைஞா் கே. சுப்ரமணியன், ஆா். ஜோதிபாசு, வி.ஜி.எஸ். குமாா் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.