மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: கரூரில் 11,287 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.

News image

கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:12 pm

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.

கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பொதுத் தோ்வை எழுத 5,602 மாணவா்களும், 5,699 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களாக 132 மாணவா்களும், 64 மாணவிகளும் என மொத்தம் 11,497 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து புதன்கிழமை தொடங்கிய தோ்வில் மாவட்டத்தில் உள்ள 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,471 மாணவா்களும், 5,628 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களில் 126 மாணவா்களும், 62 மாணவிகளும் என மொத்தம் 11,287 போ் 61 மையங்களில் தோ்வெழுதினா். 208 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களைக் கண்காணிக்க 61 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும் அனைத்து தோ்வு மையங்களுக்கும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.