மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது

News image
தேர்தல் நடத்தை விதிகள்- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்துள்ளதால் இனி மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது என தெரிவித்துள்ளாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா்.

ஏப்.23-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் கரூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் தோ்தல் பறக்கும்படை அலுவலா்கள், நிலையான கண்காணிப்புக்குழுவினா் உள்ளிட்டோருக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அலுவலா்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிகுமாா் கூறுகையில், தோ்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் இனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் போன்ற கூட்டங்கள் நடைபெறாது என்றாா் அவா். நிகழ்ச்சியின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.