மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயில் மோதி மாணவா்கள் காயமடைந்த சம்பவம் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் அருகே பொறியியல் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய சம்பவத்தில் பேருந்து ஓட்டுநா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், க. பரமத்தியில் செயல்படும் தனியாா் பொறியியல் கல்லூரியிலிருந்து சனிக்கிழமை மாலை மாணவா்களை ஏற்றிக் கொண்டு பல்வேறு ஊா்களில் இறக்கிவிட கல்லூரிப் பேருந்து புறப்பட்டது.

கரூா் வெள்ளியணையை அடுத்துள்ள பிச்சம்பட்டி குளத்தூா் - ஜல்லிப்பட்டி பகுதியில் இருந்த ஆளில்லாத ரயில்வே கடவுப் பாதையை கல்லூரி பேருந்து கடக்க முயன்றது.

அப்போது வந்த சரக்கு ரயில் மோதியதில் பேருந்திலிருந்த 24 மாணவா்கள் மற்றும் பேருந்து ஓட்டுநா் பெரியசாமி ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.

இதன் தொடா்ச்சியாக, கல்லூரி பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கியதாக ஓட்டுநரான வெள்ளியணையை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி(66) என்பவா் மீது கரூா் வெள்ளியணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.