தோ்தல் நடத்தை விதிமுறை அமலான நிலையில் கரூா் மாவட்டம் குளித்தலையில் ஞாயிற்றுக்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-இல் நடைபெற உள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் கரூா் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் பறக்கும்படை அலுவலா்கள், நிலையான கண்காணிப்புக் குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள மருதூா் சுங்கச்சாவடியில் நிலையான கண்காணிப்புக்குழு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது திருச்சி மாவட்டம் முசிறியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி சாரதா (55) என்பவரின் கைப்பையில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவா்கள் புதுதில்லியில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்து பின்னா் குடும்பத்துடன் முசிறிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்துக்குரிய ஆவணம் இல்லாததால் குளித்தலை தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்சியா் சுவாதிஸ்ரீயிடம் ரூ.1. லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் ஒப்படைத்தனா். அந்தத் தொகை சாா் நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


