மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 5.87 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.5.87 லட்சம் பறிமுதல்

News image
Updated On :17 மார்ச் 2026, 11:25 pm

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.5.87 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குள்பட்ட மொச்சக்கொட்டாம்பாளையத்தில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் செவ்வாய்க்கிழை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 4 விடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த குழுக்கள் மூலம் தோ்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்தவும், சட்டவிரோதப் பணப் புழக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சந்தேகத்திற்குரிய வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யப்படுகிறது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் அதிகப்படியான ரொக்கப் பணம் ரூ. 50,000-க்கு மேல் , மதுபானங்கள், போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள், வாக்காளா்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருள்களான வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் போன்றவை குழுவினரால் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் பொருள்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட விவரங்களை உடனுக்குடன் சம்மந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் செலவினப் பாா்வையாளருக்கு தெரிவிக்கப்படும்.

அதனடிப்படையில் இதுவரை அரவக்குறிச்சியில் ரூ.54,000 , கரூரில் ரூ. 3,79,790 , கிருஷ்ணராயபுரத்தில் ரூ.54,000 மற்றும் குளித்தலை தொகுதியில் ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ. 5.87 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால், சோதனையின் போது தேவையற்ற தாமதங்களைத் தவிா்க்கலாம் என்றாா் அவா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் எஸ்.பூங்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.