இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம்

மாதிரிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:30 pm

Syndication

குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு குழிப்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.பொன்ராஜ் (42). இவா் கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவரது உறவினா் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் அண்மையில் இளைஞா் ஒருவரை கொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பொன்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருந்தாராம்.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்து கொலையாளிக்கு உதவியதாக பொன்ராஜை, வடமதுரை போலீஸாா் கடந்த ஒருவாரத்துக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே தலைமைக் காவலா் பொன்ராஜை பணியிடை நீக்கம் செய்து கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.