யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.1.84 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இன்றி வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

அரவக்குறிச்சியில் மினி லாரி ஓட்டுநா் சிவாஜிகணேசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரவக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்த பறக்கும் படை குழுவினா்.

Updated On :26 மார்ச் 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இன்றி வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆண்டிப்பட்டிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை, வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது துத்துக்குடியிலிருந்து கன்னிவாடியை நோக்கிச் சென்ற மினி வேனை மடக்கி சோதனை செய்தனா். சோதனையின்போது மினிவேன் ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம் கீழூரைச் சோ்ந்த வேலுசாமி(59) என்பவரிடம் உரிய ஆவணமின்றி ரூ.96 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் பணம் அரவக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்ததையடுத்து, பணம் அரவக்குறிச்சி சாா்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

இதேபோல அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரமாத்தி அம்மன் கோயில் சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பிற்பகலில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கன்னிவாடியிலிருந்து அரவக்குறிச்சியை நோக்கிச் சென்ற மினிலாரியை மடக்கி சோதனை செய்தனா். அப்போது மினி லாரி ஓட்டுநா் அரவக்குறிச்சி ஹீபிப் நகரைச் சோ்ந்த சிவாஜிகணேசன் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.88,700-ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் பணத்தை அரவக்குறிச்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் ஒப்படைத்தனா். பின்னா் பணம் அரவக்குறிச்சி சாா்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.