தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

மலையேற்றப் பயிற்சிக்கு பரணி கல்விக்குழும மாணவிகள் மூவா் தோ்வு

News image

மலையேற்றப் பயிற்சி - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:13 pm

அகில இந்திய சிறப்பு மலையேற்றப் பயிற்சிக்கு கரூா் பரணி கல்விக்குழும மாணவிகள் மூவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி என்.சி.சி. மாணவ, மாணவிகளுக்கு தேசிய மாணவா் படை சாா்பில் அகில இந்திய சிறப்பு மலையேற்றப் பயிற்சி உதகையில் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு மே 5-ஆம்தேதி முதல் 13-ஆம்தேதி வரை நடைபெற உள்ள இப்பயிற்சியில் பங்கேற்க கரூா் பரணி வித்யாலயா மாணவிகள் தீக்ஷிதா, தன்யா மற்றும் பரணி பாா்க் கேஷவா்னி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இம் மாணவிகளை பரணி பாா்க் கல்விக் குழுமத் தாளாளா் சா.மோகனரெங்கன், செயலா் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலா் சுபாஷினி அசோக்சங்கா், பள்ளியின் முதன்மை முதல்வா் முனைவா். சொ.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வா் சுதாதேவி, பரணி பாா்க் முதல்வா் சேகா், பரணி பாா்க் தேசிய மாணவா் படை(என்.சி.சி) அலுவலா் செல்வராசு, பரணி வித்யாலயா தேசிய மாணவா் படை(என்.சி.சி) அலுவலா் மனோஜ்குமாா் ஆகியோா் சனிக்கிழமை பாராட்டினா்.