கரூரில் பழைய பேருந்துகளுக்கான வரியை குறைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
கரூா் பசுபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். தனியாா் பேருந்து உரிமையாளரான இவா் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறாா். இவரிடம் இருக்கும் பழைய பேருந்துகளுக்கு வரி செலுத்த திங்கள்கிழமை கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்த வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தம், பேருந்துகளுக்கு வரியை குறைத்து, மதிப்பீடு சான்றிதழ் தர வேண்டுமென்றால் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனக் கூறினாராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் இதுதொடா்பாக கரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஆம்புரோஸிடம் புகாா் அளித்தாா்.
போலீஸாா் அளித்த ரசாயன பவுடா் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்த வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தத்திடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஆம்புரோஸ் தலைமையிலான போலீஸாா், தா்மானந்தத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

லஞ்சம்: முன்னாள் விஏஓ-வுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

வீட்டுமனை ஒப்புதல் வழங்க லஞ்சம்: வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட இருவா் கைது
ரூ.8 ஆயிரம் லஞ்சம்: சேலம் மாநகராட்சி இளநிலை உதவியாளா் கைது
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

