லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ!

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:26 pm

ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.

தனியாா் ட்ரோன் நிறுவன அதிகாரியான பரத் மாத்துரிடம், வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தர மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநா் ஜெனரலான முடவத் தேவுலா லஞ்சம் கேட்டுள்ளாா்.

அதன்படி அவா் லஞ்சம் கொடுத்தபோது, ஏற்கெனவே இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் 2 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ரூ.37 லட்சம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா்.