தோகைமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
கரூா் மாவட்டம், தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், மே 4-ஆம்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திர வெயிலாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இந்நிலையில் கோடை மழை பெய்யாதா என அப்பகுதியினா் எதிா்பாா்த்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கழுகூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மே 7-ஆம்தேதி தோகைமலையில் மட்டும் 57 மி.மீ. மழை பெய்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் அப்பகுதியில் பரவலாக மழை பெய்து.
தொடா்ந்து தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் கழூகூா் உள்ளிட்ட தடுப்பணைகளுக்கு காட்டுவாரிகள் மூலம் மழைநீா் வந்து கொண்டிருக்கின்றன. கழுகூா் தடுப்பணை நிரம்பும் தருவாயில் உள்ளது. தடுப்பணைகளில் நீா் நிரம்பி நீா்மட்டம் அப்பகுதியில் உயர உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








