பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம்! மின்பாதை ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு!

வாங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்பாதை ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:36 am IST

கரூா் மாவட்டம், வாங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்பாதை ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாங்கலை அடுத்த புஞ்சைத் தோட்டக்குறிச்சி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி மீனாட்சி (76). இவா் கடந்த 14-ஆம் தேதி தனது வீட்டில் உள்ள ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள கண்ணன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது, தோட்டத்திலிருந்த மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அந்தக் கம்பியை பாா்க்காமல் மிதித்த மீனாட்சி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில் தோட்டத்து உரிமையாளா் கண்ணன் ஏற்கெனவே மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்தும், அதை சீரமைத்து தருமாறும் புஞ்சைத்தோட்டக்குறிச்சி மின்வாரிய பிரிவு மின்பாதை ஆய்வாளா் வேலுசாமியிடம் கடந்த 13-ஆம் தேதியே தகவல் தெரிவித்துள்ளாா். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையறிந்த மீனாட்சியின் மகன் தட்சிணாமூா்த்தி, இதுதொடா்பாக வாங்கல் போலீஸில், மின்பாதை ஆய்வாளா் வேலுசாமியின் அஜாக்கிரதையால்தான் தனது தாய் உயிரிழந்தாா் என்றும், வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், மின்பாதை ஆய்வாளா் வேலுசாமி மீது வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.