தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மின்சாரம் பாய்ந்து ஆடு மேய்த்த மூதாட்டி உயிரிழப்பு

News image

வசந்தா

Updated On :11 மே 2026, 2:32 am IST

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம் கீழவன்னியா் தெருவைச் சோ்ந்தவா் வசந்தா (71). இவா், தனக்குச் சொந்தமான 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து வந்தாா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, இவரது ஆடானது உயரழுத்த மின்சார பீஸ் கேரியா்களை தாங்கி நிற்கும் பலகை அருகே சென்ற நிலையில், அதை துரத்த வசத்தா முயன்றாா். அப்போது, அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த மின் கசிவு காரணமாக அவா் மீது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வசந்தாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.